Wednesday, February 26, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் திறந்து வைத்தார்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்களை முதல்வர்
மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாவட்டத்தில்,
ராமேசுவரம்,
பரமக்குடி,
கமுதி,
மண்டபம்,
வாலாந்தரவை,
திருப்பாலைக்குடி,
திருவாடானை,
செல்வநாயகபுரம்,
முதுகுளத்தூர்,
அபிராமம்,
ராமநாதபுரம் வெளிப்பட்டினம்,
ஆனந்தூர்,
ஆர்.எஸ்.மங்கலம்,
கீழமுந்தல்,
கடலாடி,
திருவரங்கம்,
முதுகுளத்தூர்
ஆகிய 17 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்
காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் செ.முருகேசன், கூட்டுறவுத்
துறை மண்டல இணைப் பதிவாளர் ஜுனு, ராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் ஆர்.கே.கார்மேகம்,
துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் தன
பாண்டியம்மாள், கூட்டுறவுத் துறை கண்காணிப்பு அலுவலர் மீனாட்சி
சுந்தரம், அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் முதல்வர் மருந்தகத்தில் நடைபெற்ற விற்பனை தொடக்க
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார். இதில்,
பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.
ராஜகண்ணப்பன் குத்துவிளக்கேற்றி விற்பனையைத் தொடங்கி வைத்து,
மருந்தகத்தைப் பார்வையிட்டார்.
செய்தி: தினமணி