(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 12, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் விலையில்லா மரக்கன்றுகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்திட விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ஹேமலதா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

 

ராமநாதபுரம் வன விரிவாக்கச் சரகத்தின் கீழ் பரமக்குடி அருகே கமுதகுடி கிராம வனத் துறை மத்திய நாற்றங்காலில்

மகாகனி,

மா,

வேங்கை,

கொய்யா,

புளி,

வேம்பு,

மாதுளம்,

சொர்க்கம்

ஆகிய மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 


ராமநாதபுரம் மாவட்ட மக்கள் விவசாய நிலம், பள்ளிக் கூடம், பொது இடம், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க, தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், சிட்டா (தேவைப்படின்)ஆகியவற்றை சமர்பித்து விலையில்லா மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

தொடர்புக்கு,

வனசரக அலுவலர் வெ.நாகராஜன் 6383940433.

வனவர் கேசவன் 9976969370.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment